பெண்களின் முகங்கள், பிறப்புறுப்புகளை குறித்வைத்து தாக்குதல்!! -ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் செய்யும் கொடூரம்-

ஆசிரியர் - Editor II
பெண்களின் முகங்கள், பிறப்புறுப்புகளை குறித்வைத்து தாக்குதல்!! -ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் செய்யும் கொடூரம்-

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்திவருமு; பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் அண்மையில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இப்பெண்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கூறும்போது, 20 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை வழங்கினேன். கிட்டதட்ட 20 குண்டுகள் அவரது தொடையில் இருந்தன. பிறப்புறுப்புகளில் குண்டுகள் காணப்பட்டன என்றார்.

இந்த நிலையில் பெண்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு