நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு!! -மக்களை வியப்படைச செய்த சம்பவம்-

ஆசிரியர் - Editor II
நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு!! -மக்களை வியப்படைச செய்த சம்பவம்-

கடலூர் அருகே பாலூர் பகுதியில் புதியதாக கட்டப்படும் வீட்டிற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்திற்குள் நாய் ஒன்று தனது 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துள்ளது. 

இதன் போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது. அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. 

ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு