யாழ்.அச்சுவேலியில் ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக கூறி வீடு புகுந்து கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக கூறி வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.அச்சுவேலி- பத்ததைமேனி பகுதியில் இன்று காலை வீடுகளுக்கு சென்று ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக கூறிய நபர் வயோதிபர் ஒருவருடைய வீட்டிலிருந்து 50 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார். 

குறித்த முதியவர் வசிக்கும் வீட்டுக்கும் குறித்த நபர் சென்றபோது அவரை அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதன்போது போது இது காணாது சற்று அதிகமாக தாருங்கள் என கூறவே முதியவரும் 500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார். 

பின்னர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர்வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு