கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்

ஆசிரியர் - Editor II
கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாளை சனிக்கிழமை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் இலங்கையிலும் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. 

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு