கடை ஒன்றை உடைத்து சுமார் 10 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது! பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கடை ஒன்றை உடைத்து சுமார் 10 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது! பொருட்களும் மீட்பு..

கடை ஒன்றை உடைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் மன்னார் மடு - இரணையிலுப்பை குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர் உடனடியாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டை அடுத்து மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மடு பொலிஸார்

நேற்று திருடப்பட்ட சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன்  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு