பெண் சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை! சாவகச்சோியில் மடக்கியது பொலிஸ்...

ஆசிரியர் - Editor I
பெண் சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை! சாவகச்சோியில் மடக்கியது பொலிஸ்...

கிளிநொச்சியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

நேற்றுமுன்தினம் கோப்பாய் பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

சந்தேகநபர் கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி அதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளது. 

எனவே வாகன இலக்கத்தை வைத்தே சந்தேகநபரை பொலிஸார் மடக்கியுள்ளனர். யாழ்.இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு