கணவனின் நண்பரான பொலிஸ் கான்ஸ்டபிளுடன் காதல்! திருமணம் செய்யுமாறு தொந்தரவு செய்த 3 பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்தில் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி...

ஆசிரியர் - Editor I
கணவனின் நண்பரான பொலிஸ் கான்ஸ்டபிளுடன் காதல்! திருமணம் செய்யுமாறு தொந்தரவு செய்த 3 பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்தில் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி...

கணவனின் நண்பரான திருமணம் ஆகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பிளேட்டினால் தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

குறித்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்தபோது அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொலிஸ்கான்ஸ்டபிளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 

அவருடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது 38 வயதுடைய மனைவியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்படடுள்ள நிலையில் பொலிஸ்கான்டபிள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ள நிலையில் அங்கு காதலனை தேடிச் சென்ற 3 பிள்ளைகளின் தாய்,

தன்னை திருமணம் முடிக்குமாறு கோரியுள்ள நிலையில் அதற்கு பொலிஸ்கான்டபிள் மறுப்பு தெரிவித்து வந்ததையடுத்து காதலனை தேடி அடிக்கடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று திருமணம் முடிக்குமாறு தொடர்சியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினம் இரவு 7 மணியளவில் குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ்கான்ஸ்டபிளை தொந்தரவு கொடுத்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இருவரையம் கூப்பிட்டு விசாரித்துவிட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்ததையடுத்து அங்கிருந்து இருவரும் வெளியே வந்தபோது 

திடீரென குறித்த பெண் தான் கொண்டுவந்த பிளோற்றினால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயமடைந்ததையடுத்து அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு