காதலிக்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை!! -காதலன் வெறிச்செயல்-

ஆசிரியர் - Editor II
காதலிக்க மறுத்த பெண் கழுத்தறுத்து கொலை!! -காதலன் வெறிச்செயல்-

காதலிக்க மறுத்ததால் காதியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நடந்த இச் சம்பவத்தில் பல் மருத்துவப்படிப்பு பயிலும் மாணவியே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபர் தற்கொலை செய்துகொள்வதற்காக தனது கையை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவிக்கையில்:- 

குறித்த மாணவி 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் ஊடாக ஞானேஸ்வர் என்பவருடன் நட்புடன் பழகிவந்தார். இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவி, ஞானேஸ்வருடன் பழகுவதை நிறுத்தினார். ஆனால் ஞானேஸ்வர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனால், சில மாதங்களுக்கு முன்பு ஞானேஸ்வர் மீது விஜயவாடா பொலிஸ் நிலையத்தில் மாணவி முறைப்பாடு செய்தார். இதையடுத்த குறித்த இளைஞரை பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

பின்னர் குண்டூர் அருகே உள்ள தக்கெல்லப்டு என்ற இடத்தில் தனது தோழியுடன் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவி தங்கியிருந்தார். மாணவி இருக்கும் இடத்தை அறிந்த ஞானேஸ்வர் திங்கள்கிழமை இரவு தக்கெல்லபாடு சென்று அவரிடம் பேச முயன்றார்.

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஞானேஸ்வர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

சம்பவம் அறிந்து உடனடியாக வந்த அயலவர்கள் பூட்டிய கதவை உடைத்து ஞானேஸ்வரை தாக்க முற்பட்டனர். அப்போது அவர் தனது கையை வெட்டினார்.

அறையில் இரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை கொலை செய்த ஞானேஸ்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு