விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் மீட்கப்பட்ட குழாயினை திறந்து பார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சி!

ஆசிரியர் - Editor I
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் மீட்கப்பட்ட குழாயினை திறந்து பார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சி!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பெருமளவு போர் தளபாடங்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் கந்தளாய் - அக்போபுர பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேகத்துக்குரிய பைப் (குழாய்) ஒன்றினை மீட்டிருக்கின்றனர் அதனை திறந்தபோது உள்ளே தோட்டாக்கள் இருந்துள்ளது.

அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்.T56 தோட்டாக்கள் 152, துப்பாக்கி 04 தோட்டாக்கள்,84s 04 தோட்டாக்கள்,9 MM துப்பாக்கியின் தோட்டாக்கள் 20,

சைலன்சர் 01,SLR துப்பாக்கி தோட்டாக்கள் 03,அக்போபுர குற்றத்தடுப்பு பொலிஸார் அனைத்தையும் மீட்டு இது குறித்த மேலதிக விசாரணைகளை 

மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு