பெற்ற மகளை பாலியன் வன்புணர்ந்த தந்தை!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
பெற்ற மகளை பாலியன் வன்புணர்ந்த தந்தை!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-

மனநலம் பாதிக்கப்பட்ட தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கேரளா மாநில பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்றமே மேற்படித் தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு 45 வயது நபரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த பின்னர், 13 வயது மனநலம் பாதித்த மகளை தந்தை வளர்த்து வந்துள்ளார். அப்போது பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமி தனது அயல் வீட்டாருக்கும், பாடசாலை ஆசிரியர்களிடமும் இது குறித்து கூறியதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பல சந்தர்ப்பங்களில் அவரது தந்தையால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உறுதி செய்யப்பட்டது. 

இந்த வழக்கில்  கேரளா மாநில பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் ஜோன், குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். 

அத்துடன் நீதிமன்றம், குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சம் இந்திய ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு