கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்!! -கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டிய மனைவி-

ஆசிரியர் - Editor II
கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்!! -கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டிய மனைவி-

கணவனை கொலை செய்த மனைவி அவரின் உடலை 22 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்த சம்பவம் பெரும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

டெல்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்த அஞ்சன்தாஸ் என்பவரின் மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் உள்ளார். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. 

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது. பின்னர் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகன் உதவியுடன் இந்த செயல்கள் அனைத்தையும் பூனம் செய்துள்ளார்.

வெட்டப்பட்ட உடல் பாகங்களை குளிர்சாத பெட்டிக்குள் வைத்தார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசி வந்துள்ளார். இது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் பொலிஸார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை பொலிஸாரினால் கைது செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு