மொரோக்கோவிடம் தோல்வியடைந்த பெல்ஜியம்!! -கோபத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
மொரோக்கோவிடம் தோல்வியடைந்த பெல்ஜியம்!! -கோபத்தில் கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்-

கத்தாரில் நடைபெற்றுவதும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 என்ற கோல்களால் வென்றது.

இதை பொறுத்துக் கொள்ளாத பெல்ஜியம் ரசிகர்கள் கோபத்தில் பிரஸெல்ஸிலுள்ள வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இந்த வன்முறை கலவரங்களில் ஒரு காரை அடித்து நொருக்கி கவிழ்க்கப்பட்டதுடன் பட்டாசுக்களை வெடிக்க வைத்து வீதியில் கலவரங்களை மேற்கொண்டனர்.

பெல்ஜியத்தின் தலைநகரில் இருந்து கவலைக்குரிய காட்சிகள் வெளிவந்துள்ளன, ஆவேசமான இரசிகர்கள் கூச்சலிட்டு, காரை நொருக்கி நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வெடித்து வன்முறைகளை மேற்கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு