யாழ்.அச்சுவேலி - தொண்டமனாறு வீதியில் உயிரிழந்த நிலையில் முதலை!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி - தொண்டமனாறு வீதியில் உயிரிழந்த நிலையில் முதலை!

யாழ்.அச்சுவேலி - தொண்டைமானாறு வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு