தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து கவனித்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆசிரியர் - Editor I
தொடர் கொள்ளையில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து கவனித்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலய சுற்றாடல் மற்றும் அயல் கிராமங்களில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பணப்பைகள் திருடுவதும் 

ஆலய பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் வீடுகளில் திருடுவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (20) மதியம் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மக்களினால் குறித்த இளைஞன் மடக்கி பிடிக்கப்பட்டார். 

கடந்த சனிக்கிழமை கோயில் வளாகத்தில் வாகனம் ஒன்றை உடைத்து திருட முற்பட்டபோது மக்கள் அவரை துரத்திச் சென்றுள்ளனர். எனினும் அவர் தப்பிச் சென்றுள்ளார். 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் குறித்த நபர் ஆலய வளாகத்தில் நடமாடியபோது மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு