19 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி -தலிபான்கள் வழங்கிய தண்டனை-

ஆசிரியர் - Editor II
19 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி -தலிபான்கள் வழங்கிய தண்டனை-

ஷரியா சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் தலிபான்களின் 19 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் கள்ளத்தொடர்பு, திருட்டு மற்றும் வீட்டை விட்டு ஓடுதல் போன்ற குற்றத்திற்காக 19 பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தலிபான்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கசையடி மற்றும் பிரம்படி தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ தகவல் இது என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 1990களின் பிற்பகுதியில் தலிபான்களின் முந்தைய ஆட்சியின்போது, தலிபான் நீதிமன்றங்களில் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களுக்கு பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகியவற்றை மேற்கொண்டது.

அனைத்து ஷரியா சட்டங்களையும் அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அண்மையில்  தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு