ஓடும் காரில் மாடல் அழகியை கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்!!

ஆசிரியர் - Editor II
ஓடும் காரில் மாடல் அழகியை கூட்டு வன்புணர்வு செய்த கும்பல்!!

கொச்சியில் மாடல் அழகியை கடத்திச் சென்று காரில் வைத்து ஒரு கும்பல்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அயலவர்கள், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அயலவர்கள் அவரை மீட்டு அருவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, பொலிஸாருக்கும் இது குறித்து தகவல் கொடுத்தனர். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாடல் அழகி தனது 3 நண்பர்கள் மற்றும் தோழி ஒருவருடன் நேற்று முன்தினம் இரவு மதுபாருக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தி மயங்கி உள்ளார்.

உடனே மாடல் அழகியின் நண்பர்கள், அவரை தங்களின் காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். வழியில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அழகியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் அழகியை அவரது வீடு அருகே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதற்கு அழகியின் தோழியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட மாடல் அழகியின் 3 நண்பர்கள், அவரது தோழி ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர். ஓடும் காரில் மாடல் அழகி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு