ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் யாழ்.மாநகர முதல்வருடன் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் யாழ்.மாநகர முதல்வருடன் சந்திப்பு..

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் நடைபெற்றது. 

யாழ்.மாநகரசபையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உடனிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, 

அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாண மாநகர சபைக்கு விஜயம் செய்தனர். 

சந்திப்பின் நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு