ரஷியாவை தாக்கப் தயார் படுத்துகின்றதா நேட்டோ? -ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை-

ஆசிரியர் - Editor II
ரஷியாவை தாக்கப் தயார் படுத்துகின்றதா நேட்டோ? -ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை-

போலந்து மீது ரஷிய ஏவுகணை விழுந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

உக்ரைன் - போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷிய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் 2 போலாந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலந்து ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்றுள்ள நிலையில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் பைடன் ஈடுபட்டார்.

ஆலோசனையின் முடிவில் நேட்டோ மற்றும் ஜி-7 கூட்டமைப்பு வெளியிட்ட கூட்டறிக்கையில், ஏவுகணை தாக்குதல் குறித்து போலாந்தின் விசாரணைக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போலாந்தில் உள்ள நேட்டோ ராணுவத் தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு