போதை பயன்படுத்தும் ஒரு வைத்தியரிடம் எப்படி சிகிச்சை பெறுவது? வைத்தியர் பிரியந்தினிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
போதை பயன்படுத்தும் ஒரு வைத்தியரிடம் எப்படி சிகிச்சை பெறுவது? வைத்தியர் பிரியந்தினிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்..

கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக பிரதேச மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, 

சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேற்கொண்டிந்தார்கள். 

போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால் வருகைதந்து போராட்டக்காரர்களின் கருத்துக்களை செவிமடுத்ததுடன், 

இனி இதுபோன்ற பிரச்சனைகள் இடம்பெறாது என உறுதிமொழியளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலந்து சென்றார்கள். 

இதன்போது போராட்டத்தை மேற்கொண்டு இருந்த பெண்கள் கருத்து தெரிவிக்கும் போது, கர்ப்பிணி தாய்மார்களுடன் மிக மோசமான வார்த்தை பிரயோகங்கள் பாவிப்பது தாதியர்களுடன் முரண்படுவது, என பல குறைபாடுகள் உள்ளன. 

அதற்குமேல் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒருவரிடம் நாங்கள் எப்படி சிகிச்சை பெறுவது? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு