ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் விரைவில்!! -ராஜமவுலி புதிய தகவல்-

ஆசிரியர் - Editor II
ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் விரைவில்!! -ராஜமவுலி புதிய தகவல்-

பிரபல இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 

இப்படத்திற்கு எப்படியும் ஒஸ்கர் விருதுகளை வாங்க வேண்டும் என படத்தை அமெரிக்காவில் திரையிட்டு, அங்கு அதற்கான விளம்பரப்படுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. இடையில் ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு நடந்த பட வெளியீட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுகையில்:-

'ஆர்ஆர்ஆர்' படத்தின் 2 ஆம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். படத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகக் கூறியுள்ளார். கதை எழுதும் பணியில் தனது அப்பா விஜயேந்திர பிரசாத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'பாகுபலி 2' ஆம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூலித்தது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 2 ஆம் பாகத்தை முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக உருவாக்கி இரு மடங்கு வசூலைப் பெறவும் வாய்ப்புள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு