யாழ்.பருத்தித்துறையில் அதிக போதைப்பொருள் பாவனை! சந்தை, பஸ்நிலையம், ஆட்டோ தரிப்பிடம் ஆகிய இடங்களில் சல்லடைபோட்டு தேடிய பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் அதிக போதைப்பொருள் பாவனை! சந்தை, பஸ்நிலையம், ஆட்டோ தரிப்பிடம் ஆகிய இடங்களில் சல்லடைபோட்டு தேடிய பொலிஸார்!

யாழ்.பருத்தித்துறை சந்தையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் நேற்று மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். 

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான  பொலிசாரே இவ் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை சந்தை, பருத்தித்துறை  முச்சக்ரவண்டி தரப்பிடம், 

மந்திகைச் சந்தை, மந்திகையில் வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு