மோசமான பந்துவீச்சு ஏமாற்றமளிக்கின்றது!! -தோல்வி குறித்து ரோகித் சர்மா கவலை-

ஆசிரியர் - Editor II
மோசமான பந்துவீச்சு ஏமாற்றமளிக்கின்றது!! -தோல்வி குறித்து ரோகித் சர்மா கவலை-

இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டி தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றியதே காரணம் என்று அணித் தலைவர் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இந்த போட்டி முடிவு குறித்து நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம். இறுதி பந்துப்பரிமாற்றத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இதன்படி 168 ஓட்டங்களை பெற்றோம். 

இருப்பினும் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. அணியொன்று 16 பந்துப்பரிமாற்றங்களில் போட்டியில் வெற்றிபெறக்கூடிய ஆடுகளம் இல்லை இது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை.

இதேவேளை எதிரணியினருக்கும் உரிய பாராட்டை வழங்கவேண்டும். அவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். புவனேஸ்வர்குமார் முதல் பந்துப்பரிமாற்றத்தை வீசியவேளை பந்து ஸ்விங் ஆகவில்லை. அவர் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை.

நாங்கள் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக வைத்திருக்க விரும்பினோம். நாங்கள் இருக்கமாக பந்து வீசியும் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றிருந்தால் அது பரவாயில்லை ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை என்றார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு