ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 26 ஆயிரம் பட்டதாரிகள்! கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 26 ஆயிரம் பட்டதாரிகள்! கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தொிவிப்பு..

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். 

நேற்று (9) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற 26,000 பேரை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக 2018, 2019, 2020, 2021 காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள், 

நாடளாவிய ரீதியாக நடைபெறவுள்ள பொதுப் போட்டிப்பரீட்சையின் மூலமாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் நிதியுதவியூடாக, பாடசாலைகளில் பௌதீக வளங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இணங்கியுள்ளதாகவும் 

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் சுட்டிக்காட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு