வாய்க்காலில் இளம் குடும்பஸ்த்தர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
வாய்க்காலில் இளம் குடும்பஸ்த்தர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு..!

வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் இளம் குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் கோணாவில் - ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள நீர்பாசன வாய்க்காலில் சடலத்தை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிவான் பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு