யாழ்.அல்லாரையில் பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லாரையில் பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையன் கைது!

வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையவர் என்றும் பொலி ஸார் தெரிவித்தனர். 

கடந்த மாதம் அல்லாரைச் சந்தியில் பெண் ஒருவரின் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டிருந்தது. 

இந்தச் சம்ப வம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டி ருந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். 

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு