கட்டுப்பாடற்ற வேகத்தினால் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி! 4 வயது சிறுவன் பலி, 3 குழுந்தைகள் உட்பட 6 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தினால் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி! 4 வயது சிறுவன் பலி, 3 குழுந்தைகள் உட்பட 6 பேர் காயம்..

கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை அனுராதபுரம் - குருநாகல் வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், இரு சிறுமிகள் மற்றும் இரு சிறுவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது 

அதில் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கமுவ பிரதேசத்தில் வசித்து வந்த சிறுவனே​ இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த இரண்டு பெண்கள், 

இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு