பட்டப் பகலில் வீடு உடைத்துக் கொள்ளையல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் நீதிமன்றிலிருந்து தப்பி ஓட்டம்!

ஆசிரியர் - Editor I
பட்டப் பகலில் வீடு உடைத்துக் கொள்ளையல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் நீதிமன்றிலிருந்து தப்பி ஓட்டம்!

வீடு உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. 

புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம் சிவநகர் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் 

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, சந்தேகத்தின் அடிப்படியில் சிவநகர் பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு