யாழ்.மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் அடைமழையால் பாதிப்பு! வீடு ஒன்று பகுதியளவில் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் அடைமழையால் பாதிப்பு! வீடு ஒன்று பகுதியளவில் சேதம்..

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் சுமார் 11 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். 

அவர்களை காக்கைதீவு மீனவர் சமூக மண்டபத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் காக்கை தீவு மீனவ சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி 

அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு