இலங்கை இராணுவத்தின் கெனுமு படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற யாழ்.கைதடியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரின் பூதவுடன் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்...

ஆசிரியர் - Editor I
இலங்கை இராணுவத்தின் கெனுமு படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற யாழ்.கைதடியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரின் பூதவுடன் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்...

இலங்கை இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவின் 1வது அணியில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்ற யாழ்.கைதடியை சேர்ந்த இராணுவ அதிகாரி விஸ்வலிங்கம் என்பவரின் உடல் பூரண இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

1932 ஆம் ஆண்டு கைதடியில் பிறந்த விஸ்வலிங்கம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கெமுனுப் படைப்பிரிவின் இணைந்து கொண்டார்.

பயிற்சி சிப்பாயாக இணைந்து கொண்ட விஸ்வலிங்கம் இராணுவப் பயிற்சியை தியத்தலாவ இராணுவ முகாமில் தனது ஆரம்ப பயிற்சியை முடித்தார். அதன் பின் கெமுனுப் படை அணியில் உள்வாங்கப்பட்டு 

திறமை உள்ள ஒரு அதிகாரியாக லான்ஸ்கோப்ரல், கோப்ரல், சார்ஜன்ட் மற்றும் வர்ண சார்ஜன்ட் ஆகிய பதவி நிலை அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார்.இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் 

கைதாடியில் உள்ள அவரது இல்லத்தில் வாசித்து வந்த நிலையில் இயற்கையை எய்தினார். அவரது மரணச் சடங்கை கெமுனுப் படை பிரிவு குண்டு மழை பொழிய இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு