வெளியே செல்லும் போதும் அசல் செய்த செயல்!! -கதறி அழுத நிவா-

ஆசிரியர் - Editor II
வெளியே செல்லும் போதும் அசல் செய்த செயல்!! -கதறி அழுத நிவா-

பிக்பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியே செல்லும் போதும் நிவாஷினியை இறுக்க அணைத்து பிரியா விடை கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரத்தில் சாந்தி மக்களால் வெளியேற்றப்பட்டார். பின்னர் 3 ஆவது வாரம் அசல் அசீம் இருவருக்குமிடையே இறுதியாக வந்த கமல் அசலை வெளியேற்றினார். தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம் மிகவும் முகம்சுழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டதுடன், அசலும் பெண் போட்டியாளர்களிடம் அதிக சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறி அசல் வெளியேறுவதாக கார்டை காட்டினார். உடனே நிவாஷினி உடைந்து அழ ஆரம்பித்தார்.  அவரை தேற்றிய அசல், 'பாத்துக்கலாம்.. அப்படி இப்படி இருக்கணும்னு தோனுச்சுனா சீக்கிரமா வெளில வா' என்று கூறி சென்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு