ஆற்றுக்குள் அறுந்து வீழ்ந்த தொங்கு பாலம்!! -குஜராத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி-

ஆசிரியர் - Editor II
ஆற்றுக்குள் அறுந்து வீழ்ந்த தொங்கு பாலம்!! -குஜராத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி-

குஜராத்தில் உள்ள தொங்குபாலம் திடீரென அறுந்து வீழ்ந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு காலம் பழமையான கேபிள் தொங்கு பாலத்தின் புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26 ஆம் திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரே நேரத்தில் 500ற்க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. 

உடனடியாக மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு