யாழ்.நகரை அண்டியுள்ள பிரபல பாடசாலை முன்பாக மலக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை வீசிய விஷமி..! பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்டியுள்ள பிரபல பாடசாலை முன்பாக மலக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை வீசிய விஷமி..! பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு..

யாழ்.புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மலக் கழிவுகளை வீசிய விசமிகள் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. 

பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, 

அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப்பதனால் 

அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு