யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடி ஒன்றரை வருடங்களின் பின் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடி ஒன்றரை வருடங்களின் பின் கைது!

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒன்றரை வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2021 ம் ஆண்டு 6 ம் மாதம் 30 ம் திகதி கோண்டாவில் செல்வபுர பகுதியில் கலையகம் ஒன்றினை தீவைத்துக் கொளுத்தி அங்கிருந்த ஆறு பேரை வெட்டி காயப்படுத்தி 

வாகனம் ஒன்றினையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இன்றைய தினம் இணுவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்

கடந்த ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்த 26 வயதேயான பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு