யாழ்.தெல்லிப்பழையில் மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை விற்பனை! 29 வயதான வியாபாரி பெருமளவு மாத்திரைகளுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை விற்பனை! 29 வயதான வியாபாரி பெருமளவு மாத்திரைகளுடன் கைது..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து இடம்பெற்ற போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புடைய ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மல்லாகம் - கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் ஒரு தொகுதி போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணையின் பின் சந்தேகநபர் மல்லாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு