யாழ்.கலட்டி பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 3 மாணவர்கள் கைது! விற்பனை செய்தவர்களையும் மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கலட்டி பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 3 மாணவர்கள் கைது! விற்பனை செய்தவர்களையும் மடக்கியது பொலிஸ்..

யாழ்.கலட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 3 மாணவர்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்பு பல்கலைகழக மாணவர் எனவும் மற்றைய இருவரும் யாழ்ப்பாண பல்கலைகழக கல்லுாரி மாணவர்கள் எனவும் இவர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும் தொியவந்துள்ளது. 

மேலும் கைதான கொழும்பு பல்கலைகழக மாணவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 

மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.தொழிநுட்ப கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் 

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், 

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மேற்படி மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நல்லுாரை சேர்ந்தவர்கள் எனவும் மற்றயவர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தொியவந்துள்ளது. 

மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு