யாழ்.கோப்பாயில் உப தபாலதிபரான பெண்ணின் பணப் பையை பறித்த வழிப்பறி கும்பல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் உப தபாலதிபரான பெண்ணின் பணப் பையை பறித்த வழிப்பறி கும்பல்..!

யாழ்.கோப்பாயில் உப தபாலதிபரான பெண்ணின் மோட்டார் சைக்கிள் முன் கூடைக்குள் வைக்கப்பட்டிருந்த பணப் பையை வீதியால் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தனது பிள்ளையுடன்டி மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் முன் கூடையில் தனது பணப் பையை வைத்திருந்துள்ளார். 

இதன்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பணப் பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

மேலும் குறித்த பணப் பையில் அலுவலக பணம் மற்றும் சொந்த பணம் ஆகியன இருந்ததாகவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு