மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை விற்பனைக்கு தயார்ப்படுத்திய வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

ஆசிரியர் - Editor I
மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை விற்பனைக்கு தயார்ப்படுத்திய வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்.நகரில் உள்ள களஞ்சியம் ஒன்றில்வைத்து மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை விற்பனைக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதான வர்த்தகரை 2 வாரங்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில்,நேற்றுமுன்தினம் மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது.

களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக நேற்றைய தினம் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

நவம்பர் 9ம் திகதி வரை குறித்த வழக்கை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு