யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படைப்பிரிவு களத்தில்..! மக்களிடம் இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படைப்பிரிவு களத்தில்..! மக்களிடம் இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தின் விசேட படைப்பிரிவு யாழ்.மாவட்டம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் தொிவித்திருக்கின்றது. 

மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பாவனை தொடர்பில் பலாலி பாதுகாப்பு தலைமையகம் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.  வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இளம் சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. 

அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேய சுந்தரவினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு 

விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக  மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

51 ஆவது காலாட் படைப்பிரிவிற்கு கீழ் காணப்படுகின்ற ஜே 150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கு பகுதியில் 513 ஆவது காலாட் படைப்பிரிவின் 16 ஆவது கெமுணு ஹேவா படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 

100 கிலோக்கிராம் கஞ்சாவுடன் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு