தீபாவளி மதுவிற்பனை!! -இரு நாட்களில் 464 கோடி ரூபாவாம்-

ஆசிரியர் - Editor II
தீபாவளி மதுவிற்பனை!! -இரு நாட்களில் 464 கோடி ரூபாவாம்-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மதுபான நிலையங்களில் 464 கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் வழக்கமாகன விடுமுறை நாட்களில் சுமார் 150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இதனை மிஞ்சும் அளவிற்கு தீபாவளி விற்பனையாக கடந்த 2 நாட்களில் 464.21 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

அதன்படி, நேற்று சென்iயில் 51.52 கோடி, திருச்சியில் 50.66 கோடி, சேலத்தில் 52.36 கோடி, மதுரையில் 55.78 கோடி, கோவைவையில் 48.47 கோடி என மொத்தமாக 258.79 கோடிக்கு மது விற்பனையானது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை அதே இடங்களில் மொத்தமாக 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என்று மதுபான சாலைகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்தாண்டின் சாதனையை இந்த தீபாவளி முறியடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 101.04 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு