யாழ்.கொடிகாமத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மனைவி மீன் வெட்டுவது பிழை என விளக்கியதை தொடர்ந்து விபரீதம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மனைவி மீன் வெட்டுவது பிழை என விளக்கியதை தொடர்ந்து விபரீதம்...

யாழ்.கொடிகாமம் பகுதியில் மீன் வெட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் அவர் மீன் வெட்டும் விதம் தவறு என கூறியதால் உருவான வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து மனைவி மீது கணவன் கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக் கிழமை மதியம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் மனைவி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் கணவனின் கையிலிருந்த கத்தியை பறித்து மனைவியும் கணவனை வெட்டிய நிலையில் கணவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு