வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்! யாழ்.காங்கேசன்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்! யாழ்.காங்கேசன்துறையில் சம்பவம்..

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. 

நேற்றிரவு 9 மணியளவில் சாரதி மட்டும் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.

சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு தீயணைத்த போதும் 

வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு