மாமாவின் மரணச் சடங்கில் மருமகன் மீது முறிந்து விழுந்த மரம், மருமகனும் பலியான சோகம்..!

ஆசிரியர் - Editor I
மாமாவின் மரணச் சடங்கில் மருமகன் மீது முறிந்து விழுந்த மரம், மருமகனும் பலியான சோகம்..!

மாமாவின் மரண சடங்கிற்கு வந்திருந்த மருமகன் மீது மரம் முறிந்து விழுந்ததில் மருமகனும் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கம்பளை - அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது - 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக் கிரியைகள் இன்று (19.10.2022) இடம்பெறவிருந்தன.

சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. 

எனவே, அவற்றை அகற்றி தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு