வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்!! -ஆதாரங்களை சமர்பித்த நயன் - விக்னேஷ்-

ஆசிரியர் - Editor II
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்!! -ஆதாரங்களை சமர்பித்த நயன் - விக்னேஷ்-

வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். 

இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு