கனடா கோர விபத்தில் தமிழர்கள் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம்!!

ஆசிரியர் - Editor II
கனடா கோர விபத்தில் தமிழர்கள் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம்!!

கனடாவின் மார்க்கமில் இந்த வாரம் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழ்ந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்களை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இதன்படி குறித்த விபத்தில் 21 வயதான பதீரன் புவனேந்திரன் மற்றும் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் தாயார் 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பதீரன் வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். அவர் தனது பிறந்தநாளிலேயே உயிரழந்துள்ளார். நிலுக்சானா ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு