லண்டனில் கத்திக் குத்து!! -இளைஞர் பரிதாபமாக பலி-

ஆசிரியர் - Editor II
லண்டனில் கத்திக் குத்து!! -இளைஞர் பரிதாபமாக பலி-

தென்மேற்கு லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 24 வயது இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 13 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 20.20 மணிக்கு கிங்ஸ்டன்-அபான்-தேம்ஸில் உள்ள பேர்பீல்ட் சாலைக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர் உதவி பெறுவதற்காக அவர் ஒரு களியாட்ட விடுதிக்கு சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த நபர் முறையாக அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு