யாழ்.நாவாந்துறையில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு