மூன்றாவது வெற்றி வாரத்தில் பொன்னியின் செல்வன்!! -500 கோடி கடக்கப்போகும் வசூல்-

ஆசிரியர் - Editor II
மூன்றாவது வெற்றி வாரத்தில் பொன்னியின் செல்வன்!! -500 கோடி கடக்கப்போகும் வசூல்-

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்' படம் நல்லதொரு வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. 

இரு வாரங்களில் இந்தப் படம் 400 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தமிழ் சினிமாவில் மிக விரைவில் 400 கோடியைக் கடந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இன்று படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இப்படத்திற்கான முன்பதிவுகள் சிறப்பாகவே உள்ளது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 60 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐமேக்ஸ் தியேட்டர்களில் 90 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு