கடிக்க முயன்ற நாயை சுட்டுக் கொன்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலர்! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கடிக்க முயன்ற நாயை சுட்டுக் கொன்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலர்! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

யாழ்.வல்வெட்டித்துறை பகுதிக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தேயின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நாய் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தனது நண்பர் ஒருவரை காண்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு வல்வெட்டித்துறைக்கு சென்றிருக்கின்றார். 

அங்கு வளர்ப்பு நாய் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தேயை கண்டதுடன் குரைத்ததுடன் கடிக்க முற்பட்டுள்ளது.

அதனால் இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அந்த நாய் உயிரிழந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகின்றது.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்க பொலிஸார் மறுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு