கண்கலங்கிய ஜி.பி.முத்து!! -கொந்தளிக்கும் ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
கண்கலங்கிய ஜி.பி.முத்து!! -கொந்தளிக்கும் ரசிகர்கள்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் நேற்று புதன்கிழமை இரவு சக போட்டியாளரிடம் சண்டை போட்ட ஜி.பி.முத்து உணர்ச்சிவசப்பட்டு அழுத விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. இந்த சீசனில், யு.10டி.யூப் பிரபலமான ஜி.பி.முத்துவும் கலந்து கொண்டுள்ளார். 

போட்டியாளர்கள் சமையல் கிளப், பாத்திரம் கழுவும் கிளப், வீட்டை சுத்தம் செய்யும் கிளப், பாத்ரூம் கிளப் என நான்கு கிளப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒவ்வொரு கிளப்பிலிருந்தும் 4 பேரை தேர்வு செய்து வெளியில் இருக்கும் வாழைப்பழ வடிவிலான படுக்கைக்கு அனுப்புவது ஒரு டாஸ்க்காக விளையாடப்பட்டு வருகின்றது.

இதில், பாத்திரம் கழுவும் கிளப்பிலிருந்து சின்னத்திரை நடிகை ஆயிஷாவை செய்தி வாசிப்பாளார் ஜனனி வாழைப்பழ படுக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, நேற்று புதன்கிழமை இரவு ஜி.பி.முத்துவை ஆயிஷா வாழைப்பழ படுக்கைக்கு தேர்வு செய்து அறிவித்தார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, பாத்திரம் கழுவும் அணியில் இருந்து கொண்டு சமையல் அணிக்காக வேலை பார்த்ததாக குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜி.பி.முத்து, எனது வேலைகளை செய்த பின்னர்தான் பிற அணியினருக்கு உதவியதாகவும், இனியும் அப்படிதான் இருப்பேன் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஜி.பி.முத்து மரியாதை தரவில்லை என்றும், அவர் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறார் என்றும் தனலட்சுமி கூறியுள்ளார். இதைக் கேட்ட ஜி.பி.முத்து, 'எனது மகள் வயது உனக்கு, நான் நடிக்கிறேனா' என்று கொந்தளித்தார்.

தொடர்ந்து, வீட்டிற்குள் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து திடீரென மன அழுத்தத்தில் அழுக ஆரம்பித்துவிட்டார். சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

கடந்த நான்கு நாள்களாக வீட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்து கலகலப்பாக இருந்த ஜி.பி.முத்து அழுவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் பெங்கியேழ ஆரம்பித்துள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு