ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் நிறைவேறியது தீர்மானம்!! -வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா-

ஆசிரியர் - Editor II
ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் நிறைவேறியது தீர்மானம்!! -வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா-

உக்ரேன் மீது தொடர்ச்சியான போர் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புட்டின் அதிகாரபூர்வமாக அறிவித்தமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

முன்னதாக வாக்கெடுப்பு மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஐ.நா.சபைக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், உக்ரேன்-ரஷ்யாவுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைதி பேச்சுவார்த்தை மட்டும் ஒரே தீர்வாக இருக்கும் என்றார்.

இந்த பிரச்சினையில் அமைதிக்கான பாதையை உருவாக்க அனைத்து நாடுகளும் தங்களது தூதரக ரீதியான நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு